என்சோக கதையை கேளுங்க ! (1)

Monday 16 May 2011




 நாங்கள் கடந்த 20 வருடத்திற்க்கு  மேலாக மும்பையில் வசித்து வருகிறோம், எனது குடும்பம் சிறிய குடும்பம் அப்பா, அம்மா, மனைவி மற்றும் 1-மகள், 1-மகன்.

அப்பா 2007ல் மும்பையில் இறந்துவிட, அம்மாவுடனே வசித்துவந்தோம். இந்த ஆண்டு எனதுமகள் +2 தேர்வு எழுதியுள்ளார், மகன் +1 ல் தேர்ச்சியாகி +2 சென்றுள்ளார். இந்த ஆண்டு மேற்படிப்பிற்க்காக எனது மகள் சில நுழைவு தேர்வு எழுத வேண்டியிருந்ததால் தமிழ்நாடு(சொந்த ஊருக்கு) செல்ல நினைக்கவில்லை. இருந்தும் திடிரென முடிவெடுத்து நானும் எனது மகனும் மட்டும் 
ஒருவார பயணமாக சொந்த ஊருக்கு சென்றுவருவது என முடிவுசெய்து பயண ஏற்பாடு செய்யும் வேலையில்,எனது நண்பர் ஊரிலிருந்து தொலைபேசியின் மூலம் நமது ஊரில் இந்த வருடம் "நாங்கூர் அய்யனாருக்கு" பொங்கள் வைத்து அன்னதானம் போடுகிறோம் தாங்கள் குடும்பத்துடன் வந்து கோவில் விஷேஷத்தில் கலந்துகொள்ளுமாறு கூற எனது அம்மாவும் ஆமாம்தம்பி இதுபோல கிராமத்துகோவில் விஷேஷத்தை நமது குழந்தைகள் பார்த்தது இல்லை நாம் அனைவரும் 1 வார பயணமாக ஊர் சென்றுவரலாம் என கூற  முதலில் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று விட்டு பிறகு எங்கள் சொந்த ஊருக்கு செல்வதென பயணத்திற்க்கான ஏற்பாட்டைச்செய்தேன்.  

ஏப்ரல்16-ல் மும்பையிலிருந்து மாலை 3.45 க்கு கன்னியாகுமாரி செல்லும் இரயிலில் பயணித்து மறுநாள் மாலை 5.30க்கு காட்பாடி ரயில்நிலையம் வந்தடைந்தோம்  ,முனேற்பாடின்படி
ஏற்பாடு செய்திருந்த TATA INDIGO கார் வந்து எங்ளை அழைத்துசெல்ல காத்திருந்தது, நாங்களும் அந்த காரில் திருவண்ணாமலையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தோம்
அன்று பவுர்ணமி என்பதால் ரோட்டில் வாகன நெரிசல் அதிகமாகவே கானப்பட்டது அதுவும் அன்று
சித்ராபவுர்ணமி இருந்தும் கார் ஓட்டுனர் காரை நிதானமாக ஓட்டிச்சென்றார்.

வேலூரை தாண்டி போலுருக்குமுன்பாகவே யாரும் எதிர்பாராவிதமாக.......
உண்மைவிரும்பி.
மும்பை



தொடர்வேன்..............................................................................................

Read more...

என்சோக கதையை கேளுங்க !

Tuesday 10 May 2011

பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம் !

நான் கடந்த4- வாரமாக எந்தவித பதிவையும் படிக்கவும் இல்லை,எழுதவும் இல்லை, காரணம்   கோடைவிடுமுறை என்பதால் குழந்தைகளின் வற்புறுத்தலால்
குடும்பத்துடன் மும்பையிலிருந்து தாயகம்(சென்னை/திருவண்ணாமலை/ சின்னசேலம்/ ஆத்தூர்/சேலம்)சென்றிருந்தேன்.

கூதுகலமாகஇருக்கபோன இடத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்
வலிகளை தங்கலுடன் பகிர்ந்துகொள்வதனால் ரணத்திற்க்கு மருந்து கிடைக்கும் என்ற என்னத்தில்
   வலிகளை அடுத்தபதிவில் பகிற்கிறேன் !


இவண்.தங்களின் அன்பு நண்பன்
உண்மைவிரும்பி
.

மும்பை.

Read more...
online Tamil book store

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP