ஆலயம் ( தெரிந்துகொள்வோம்)

Tuesday 5 April 2011


                    
 வணக்கம் ! கடவுள் நம்பிக்கை அனைவருக்கும் இருக்கவேண்டுமென்ற கட்டாயம் இல்லை, அது அவர் அவர் நம்பிக்கையை பொருத்தது, இருந்தும் மும்பையில் மாட்டுங்கா பகுதியில் வசித்து வருபவர் சுவாமி ஸ்ரீனிவாச ராமானுஜர், இவர் ஜோதிட கலையில் சிறந்து விளங்குபவர்  இவர் எம்பெருமானின் அவதாரமான ஸ்ரீகலியுக லஷ்மி நரசிம்மர் சன்னதியை நிருவ நினைத்து ,அதை நடைமுறையும் படுத்தியுள்ளார். ஆலயம் அமைந்துள்ள இடமானது மும்பையிலிருந்து சுமார் 75கி.மீ ,அதாவது மும்பையிலிருந்து நியு மும்பை(பன்வெல்), இங்கிருந்து கோவா செல்லும் வழியில் பென்காவ் என்ற ஊருக்கு அருகில் இர்வாடியில் இரண்டு பக்கமும் மலைக்கு நடுவில் ஹைவேக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இங்கு ஸ்ரீ கலியுக லஷ்மி நரசிம்ம உட்சவர், ஸ்ரீ கலியுக ரங்கநாதர், ஸ்ரீ கலியுக ஸ்ரீனிவாச பெருமாள்,ஸ்ரீ கலியுக ஆண்டால் தாயார்,ஸ்ரீ கலியுக ஹனுமன், ஸ்ரீ கலியுக கருடால்வார்,மற்றும் ஸ்ரீ கலியுக பத்மாவதி தாயார் போன்ற விஹ்ரகம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் கோசாலையும்  அமைந்துள்ளது இதில் தற்பொழுது  70 பசுக்கள் உள்ளது.இவ்வாலயத்தில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகளும் மற்றும் குத்துவிளக்கு  பூஜைகளும் நடைபெருகின்றன. இவ்வாலயத்திற்க்கு  தமிழ் மக்கள் மட்டுமின்றி கிறிஸ்துவ மக்களும் மற்றும் இஸ்லாமிய மக்களும்  வந்து இறையருள் பெற்று செல்கின்றனர்.இவ்வாலயத்திற்க்கு வருபவர்கள் அனைவருக்கும் மூன்று வேலை அன்னதானம் வழங்குகிறார்கள், மற்றும் இவ்வாலயத்திற்க்கு வருவதற்க்கு பன்வெல்லில் இருந்து பென்காவ் செல்லும் அரசு பேருந்து அடிக்கடி இருக்கிறது.

            இவ்வாலயத்தை திருப்பதி போன்று கோபுரங்கள்,கலசங்கள் வைத்து சிறப்பாக 40 கோடியில் அமைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இவ்வாலயம் எக்குறையும் இல்லாமல் சிறப்புடன் முழுமைபெற எல்லாம்வள்ள இறைவனை நாமும் வேண்டிக்கொள்வோம் !

தாங்கள் மும்பையில் வசிப்பவராக இருந்தால்  முடிந்தால் ஒருமுறை இவ்வாலயத்திற்க்கு சென்று வாருங்கள்.
முடிந்தால் இவ்வாலய திருப்பணிக்கு தங்கலால் முடிந்த பொருளோ, பணமோ கொடுத்து உதவலாம். தாங்கள் அளிக்கும் உதவிக்கு வரிவிலக்கு உண்டு. தொடர்புக்கு: திரு ஸ்ரீனிவாச ராமானுஜர் கைபேசி எண்:09324087044.

இத்துடன் ஆலய புகைப்படம் இனைத்துள்ளேன்.








                                                                       
                website:www.kalyuganarasimhatemple.org

இவன்.
உண்மைவிரும்பி.
மும்பை.

5 comments:

Anonymous,  6 April 2011 at 00:18  

Nalla mujatchy......

ஆனந்தி.. 6 April 2011 at 05:19  

தகவல்களுக்கு மிக்க நன்றி...புகைப்படங்கள் எல்லாம் வெகு அருமை...

ஆனந்தி.. 6 April 2011 at 05:23  

நீங்க உங்க ப்லாக் கில் settings ->comments settings-> to remove word verification பண்ணுங்க சகோ...இப்படி பண்ணினால் உங்களுக்கு கம்மென்ட் போடும்போது word verify கேட்காது...அப்புறம்..மேலே தலைப்பில் ஆலயம் (தெரிந்து கொள்வோம்) னு மட்டும் சின்ன பிழையை திருத்திருங்க..நல்ல பண்ணுங்க சகோ..எந்த ப்லாக் சம்பந்தப்பட்ட உதவிகளையும் கேளுங்க..தெரிஞ்சால் உதவி செய்கிறேன்..இன்டிலி வோட்டு பட்டை கூட வச்சிருங்க...

எனது கவிதைகள்... 8 April 2011 at 05:14  

சகோதரி தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி, மற்றும் நான் பதிவுலகத்திற்க்கு புதியவன் word verification எப்படி செட் செய்யனும், மற்றும் பதிவர்களின் கமெண்டிர்க்கு எப்படி Reply தறுவது என்பதனையும்,இன்ட்லி வோட்டு பட்டையை எப்படி இணைப்பது என்பதையும் எனக்கு விபரமாக தெறிவிக்கவும்.
முடிந்தால் எனது மின்னஞலில் தெறிவிக்கவும்.

எனது மின்னஞல் முகவரி:unmaivrumbi@webdunia.com

என்றும் நன்றியுடன்

உண்மைவிரும்பி.
மும்பை.

Post a Comment

online Tamil book store

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP